Saturday, April 19, 2008

அம்மா

உன் முகம் காணாது
என் மனம் வாடுதம்மா

கண்களின் ஈரம் அது
என்னை நனைக்குதம்மா

உன் இமைகள் துயில்கையில்
என் கண்கள் ஏங்குதம்மா

பாசக் கயிற்றினாலே
என் இதயம் நோகுதம்மா

உன் குரல் கேட்கையிலே
என் உள்ளம் ஆறுதம்மா

வாழ்க்கையின் வழியில்
முட்கள் குற்றுதம்மா

வலியின் நோவுகள்-உன்
நினைவு ஆற்றுதம்மா

No comments:

Post a Comment

Thanks