எத்தனை நகைப்பொலிகள்
இன்னும் என்காதுகளில்
சிரிக்கட்டும் விட்டுவிடு
சீர்கெட்ட உலகம் இது
ஒடும் படைகளினது
வெற்று வேட்டொலிகள்
துளைக்காது உன் இதயம்
போகட்டும் விட்டுவிடு
சிரித்தவன் இன்று இங்கே
சிறந்தவள் என்கின்றான்
சிரிக்கிறேன் நான் இங்கே
என் ஒலி கேட்கிறதா?
No comments:
Post a Comment
Thanks