
பள்ளி நாட்களில்
பட்டாம் பூச்சிபோல்
பழகிய உன் நினைவு
பசுமையாக என் மனதில்...
பல்லாண்டுகள்
பல பொழுதுகள்
பறந்து போனாலும்
பால் நிலவாக உன் நினைவு...
நட்புக்கு நீயும் தோழி
இரங்குவதில் நீயும் என் தாய்
அன்புக்கு நீயும் காதலி
அறிவில் நீயும் என் ஆசான்
உன்னை நான் சந்தித்தேன்
இளவேனிற்காலம்
உன்னை நான் பிரிந்தேன்
இலையுதிர்காலம்
உன்னைப்பிரிந்த பின் என்வாழ்வு
மாரிகாலம்
வாழ்கை என்பது கனவு
உன் நினைவுகள் நனவு
உறங்குமா உன் நினைவு
No comments:
Post a Comment
Thanks