செம்பருத்தி பூ இதழால்
செம்பவள வாய் திறவாய்
கரு வண்டுக் கண் அழகி
கடைக் கண்ணால் பார்த்திடுவாய்
கருங்கூந்தல் தேன் குழலி
கருணை உள்ளம் கொண்டிடுவாய்
மல்லிகைக் கொடி இடையாள்
மன்மதக் கணை விடுவாய்
சந்தனப் பாதத்தால் பல
சந்தங்கள் சேர்த்திடுவாய்
அன்னத்தின் நடை அழகால்
நற்பாதம் பதித்திடுவாய்
எங்கள் நெஞ்சத்தில்
நர்த்தனம் ஆடிடுவாய்
No comments:
Post a Comment