Monday, January 22, 2007

இலக்கியப்பெண்




செம்பருத்தி பூ இதழால்
செம்பவள வாய் திறவாய்

கரு வண்டுக் கண் அழகி
கடைக் கண்ணால் பார்த்திடுவாய்

கருங்கூந்தல் தேன் குழலி
கருணை உள்ளம் கொண்டிடுவாய்

மல்லிகைக் கொடி இடையாள்
மன்மதக் கணை விடுவாய்

சந்தனப் பாதத்தால் பல
சந்தங்கள் சேர்த்திடுவாய்

அன்னத்தின் நடை அழகால்
நற்பாதம் பதித்திடுவாய்

எங்கள் நெஞ்சத்தில்
நர்த்தனம் ஆடிடுவாய்

No comments: