Saturday, June 28, 2008

கிறுக்கல்கள்

வரியில்லா மொழி
ஒலியில்லா பேசும்
அவள் கண்கள்
********* ******

படபடக்கும் பட்டாம் பூச்சியின்
இறக்கைகள் பார் அங்கே
அவள் இமைகளில்
**********************

ஏன் இத்தனை மொழிகள்
இந்த உலகத்தில்
அவள் கண்களால் பேசும்
இந்த மெளன மொழியே போதும்
***********************************

என் பெயரின் இனிமை
எனக்குப் புரிந்தது
நீ என் பெயர் சொல்லி
அழைத்த போது
*****************

வான் மதியே
தேய்ந்ததுவோ
உன் மதிமுகம்
கண்டதாலா
*************

கவிதைகள் என்றார்கள்
உன் பெயரை நான்
கிறுக்கியபோது
****************

No comments: