Saturday, June 28, 2008

உனை வரைந்தேன்



வான வில்லின்
வர்ணங்கள் வளைத்து
எண்ணம் என்னும்
வண்ணம் எடுத்து

கற்பனைத்தேன் கலந்து
காரிகை உனைக் கிறுக்க
தூரிகை நான் எடுத்தேன்

காவியம் பேசும்- அவள்
கண்கள் வரைய
கரு முகிலை தூதுவிட்டு
கருவிழியாக்கினேன்

சிறகடிக்கும்
சிட்டுக்குருவியின்
இறகை- அவள்
இமைக்கு மடலாக்கினேன்

வளர்ந்து வரும்
வளர் பிறையை
வளைத்து-அவள்
வதனத்தில் வைத்தேன்

இளம் தளிர்-அவள்
இதழ் வைக்க
இதழோடு-பூ
இதழ் வைத்தேன்

கார் காலத்து
கரும் இருளை
காதல்-கள்ளியின்
கூந்தலாக்கினேன்

தேன் நிலவு
தேவியை தேடி-பிடித்து
திருமகளின்-திரு
திலகமாக்கினேன்.

No comments: