Saturday, June 28, 2008

காதலன்

உன்னைக்
கவிபாட
எனக்கு
வெக்கமடா

உன்னைப்போல
அழகன்
யாரும்
இல்லையடா

கருமை
நிற
சுருள்
முடியழகா

உனக்கு
நான்
தான்
பேரழகா

அகன்ற
தோழ்கள்
வீர
மார்பழகா

அதில் என்
முகத்தைப்
புதைத்தேன்
அது நாணமடா

சிங்கம்
போன்ற
வீர
நடையழகா

உன்
கருணையின்
கண்கள்
தானழகா

என் கண்களின்
ஒளி
விம்பம்
நீதானடா

அன்புக்கு
நீயும்
என்
தந்தையடா

அரவணைப்பில்
நீயும்
என்
தாய்தானடா

உன்னைப்போல
என்னைக்
கவர்ந்தவர்
இல்லையடா

மொத்ததில்
நீயும்
என்
இதயமடா