Saturday, June 28, 2008

காலைப்பொழுது

ஆதவன் தேரிலே
அரியணை ஏறியே
அகிலம் ஒளிரவே
அக்கினி சுரந்தனன்

பகலவன் செங்கதிர்
பங்கயம் தீண்டவே
பனிபட்ட இதழது
பகலாய் முகிழ்ந்தது

களிறின் பிளிறல்
சங்காக முழங்கிட
செவிகள் இரண்டும்
சாமரை வீசவே
துதிக்கையால் துதித்தது
தூயவன் ஞாயிறை

இளம் குளிர் காற்று
இதயத்தை நனைக்க
இன்பம் பொங்கிட
இனிமையாய் புலர்ந்தது

காக்கையின் கரைதலும்
குயிலின் பாடலும்
மஞ்ஞையின் அகவலும்
காதில் ஒலித்திட
கரைந்தது இருள்
மலர்ந்தது பகல்