Saturday, June 28, 2008

இளமைக்காலம்

கொத்துக் கொத்தாய்
பூத்த மலர்கள்
தலைகள் சாய்ந்து...
பசுமை இலைகள்
பழுத்து விழுந்து...
சுட்ட சூரியன்
வெப்பம் தனிந்து...
பகல்ப் பொழுதும்
இருள் கவிழ்ந்து...
வெண்திரைப்பனி
வானத்தை மூடி...
குளிரின் வலிமை
உடலைத்துளைக்க...
பிறந்தது குளிர்காலம்
போனது இனிய மோகம்...
மீண்டும் பிறக்கும்
அந்தக்காலம் -இனி...
மீண்டும் மீள்வோமா-நாம்
அந்த இளமைக்காலம்