Monday, January 22, 2007
இலக்கியப்பெண்
செம்பருத்தி பூ இதழால்
செம்பவள வாய் திறவாய்
கரு வண்டுக் கண் அழகி
கடைக் கண்ணால் பார்த்திடுவாய்
கருங்கூந்தல் தேன் குழலி
கருணை உள்ளம் கொண்டிடுவாய்
மல்லிகைக் கொடி இடையாள்
மன்மதக் கணை விடுவாய்
சந்தனப் பாதத்தால் பல
சந்தங்கள் சேர்த்திடுவாய்
அன்னத்தின் நடை அழகால்
நற்பாதம் பதித்திடுவாய்
எங்கள் நெஞ்சத்தில்
நர்த்தனம் ஆடிடுவாய்
Monday, January 15, 2007
அம்மா
அன்புக்கு
இலக்கணமும் நீ தான்
தமிழ் பண்புக்கு
புததகமும் நீ தான்
கற்புக்கு
கண்ணகியும் நீ தான்
பொறுமைக்கு
பூமியும் நீ தான்
கண்டிப்பதில்
தந்தையும் நீ தான்
அன்புக்கு அன்னை
திரேசாவும் நீ தான்
படி என்று சொல்லவதற்கு
ஆசானும் நீ தான்
வீட்டில் இரட்சியத்துக்கு
அரசியும் நீ தான்
அன்போடு பேசும்
தோழியும் நீ தான்
பூமியில் வாழும் உயிர் உள்ள
தெய்வமும் நீ தான்
இலக்கணமும் நீ தான்
தமிழ் பண்புக்கு
புததகமும் நீ தான்
கற்புக்கு
கண்ணகியும் நீ தான்
பொறுமைக்கு
பூமியும் நீ தான்
கண்டிப்பதில்
தந்தையும் நீ தான்
அன்புக்கு அன்னை
திரேசாவும் நீ தான்
படி என்று சொல்லவதற்கு
ஆசானும் நீ தான்
வீட்டில் இரட்சியத்துக்கு
அரசியும் நீ தான்
அன்போடு பேசும்
தோழியும் நீ தான்
பூமியில் வாழும் உயிர் உள்ள
தெய்வமும் நீ தான்
Subscribe to:
Posts (Atom)