Saturday, April 19, 2008

புரிந்து கொள்ளுங்கள்

சுற்றுகின்ற பூமியிலே நாம்
நிரந்தரம் இல்லை
இதை சிந்திக்க மனிதனுக்கு
நேரமும் இல்லை

சத்தம் போட்டுயாரும் இங்கு
சண்டைபோடத்தேவை இல்லை
நாளை இந்த பூமியில்
நாம் யாரும் இல்லை

உயர்வு தாழ்வு இங்கு
தேவை இல்லை
நாளை நீ போகும் போது
உன் கூடவருவது இல்லை

சாதி மத பேதம் இங்கு
பெரும் தொல்லை
அதனால் தமிழனின் வாழ்வில்
முன்னேற்றம் இல்லை

கறுப்பு வெள்ளை என்று
இங்கு யாரும் இல்லை
இது மாயையின் தோற்றம்தான்
நீ புரிந்து கொள்வது இல்லை

இங்கு வாழ்வதுதான்
வாழ்க்கை இல்லை
இதைப் புரியாத மனிதன்
பூரணமனிதனும் இல்லை

No comments: