உன் முகம் காணாது
என் மனம் வாடுதம்மா
கண்களின் ஈரம் அது
என்னை நனைக்குதம்மா
உன் இமைகள் துயில்கையில்
என் கண்கள் ஏங்குதம்மா
பாசக் கயிற்றினாலே
என் இதயம் நோகுதம்மா
உன் குரல் கேட்கையிலே
என் உள்ளம் ஆறுதம்மா
வாழ்க்கையின் வழியில்
முட்கள் குற்றுதம்மா
வலியின் நோவுகள்-உன்
நினைவு ஆற்றுதம்மா
No comments:
Post a Comment