Saturday, April 19, 2008

கடற்கரைச்சாலை ஓரம்




கடற்கரைச் சாலையோரம்
அந்தி சாயும் மாலை நேரம்

கடல் மகள் கலைந்த கோலம்
கண்களில் காதல் ஜாலம்

அலைகளின் ஆட்டம் எல்லாம்
கரைகளை கரைத்து சீண்டும்

கடலிடை நாரைக்கூட்டம்
காத்திடும் இரைகள் தேட

மணலிலே நண்டுக்குடைகள்
கடலுடன் தூது பேசும்

தவழ்ந்திடும் தென்றல் காற்று
உடலதை வருடிச்செல்லும்

கரைந்திடும் காக்கை
உறைவிடம் நாடிச்செல்லும்

இயல் இசைக்கவிதையாக
இயற்கையைப் போற்றிப்பாடும்

No comments: