Wednesday, June 25, 2008

ஆசைகள்

நான் பிறந்த
மண்ணை
தொட்டுப் பார்க்க
ஆசை

வேப்பமரத்து
நிழலில்
படுத்து
உறங்க ஆசை

பலாமரத்து
கனியை
பறித்து
தின்ன ஆசை

பனை
மரத்துக் கள்ளை
களவா குடித்துப்
பார்க்க ஆசை

ஒடியல் மா
புட்டு
சாப்பிடத்தான்
ஆசை

தேக்க
மரத்துக் கிளியை
பிடித்து
வளர்க்க ஆசை

தமிழ்
வாத்தியாரிடம்
குட்டு
வாங்க ஆசை

கோவில்
மணியை ஒருக்கா
அடித்துப் பார்க்க
ஆசை

புளியமரத்து
பழத்தை
சூப்பித் தின்ன
ஆசை

மாமரத்துக்
காயை
குத்தித் தின்ன
ஆசை

கிணத்து
தண்ணிரில்
அள்ளி
குளிக்க ஆசை

கொடிகாமத்து
தேங்காய்
கொறித்து
தின்ன ஆசை

கீரி மலைக்
கேணியில்
நீச்சல்
அடிக்கத்தான் ஆசை

காங்கேசந்துறை
சுண்ணாம் போடு
வெத்திலை
போட ஆசை

மாசி முரல்
சொதியோட
இடியப்பம்
சாப்பிடத்தான் ஆசை

ஜாதியம் பேசும்
நாக்கை
அடைத்து விட
ஆசை

சீதனம் வாங்கும்
கோழை தலையில
மொட்டை போட
ஆசை

பெண்கள் கையை
இழுப்பவன்
கையை முறித்து
விட ஆசை

சிங்களப் படையை
மண்ணை விட்டு
துரத்தி விட
ஆசை

பொங்கி எழும்
மக்கள் படையுடன்
சேர்ந்து விட
ஆசை

மாணவரின்
பேனாவை பறிக்கும்
கயவன் நெஞ்சில்
குத்திவிட ஆசை

ஈழத்தில்
கற்றவரை கொல்லும்
மூதேவிகள் முகத்தில்
குத்திவிட ஆசை

பேரினவாதம்
பேசும் பிக்குவின்
காவியை
களட்டிவிட ஆசை

காட்டிக் கொடுக்கும்
கயவன்
மண்டையில்
போட ஆசை

சொந்த மண்ணை
மீட்க நானும்
அங்கு போக
ஆசை

மாவீரர்
தியாகத்தை
என் கவியில்
பாட ஆசை

கரும்புலிகள்
வீரத்தை
புதிய புறநானூற்றில்
எழுதிவிட ஆசை

அகதி என்ற
சொல்லை மாற்றி
தமிழ் புலி
ஆகி விடஆசை

மலரும்
தமிழ்ழீழத்தை
பார்த்துவிட
ஆசை