நான் பிறந்த
மண்ணை
தொட்டுப் பார்க்க
ஆசை
வேப்பமரத்து
நிழலில்
படுத்து
உறங்க ஆசை
பலாமரத்து
கனியை
பறித்து
தின்ன ஆசை
பனை
மரத்துக் கள்ளை
களவா குடித்துப்
பார்க்க ஆசை
ஒடியல் மா
புட்டு
சாப்பிடத்தான்
ஆசை
தேக்க
மரத்துக் கிளியை
பிடித்து
வளர்க்க ஆசை
தமிழ்
வாத்தியாரிடம்
குட்டு
வாங்க ஆசை
கோவில்
மணியை ஒருக்கா
அடித்துப் பார்க்க
ஆசை
புளியமரத்து
பழத்தை
சூப்பித் தின்ன
ஆசை
மாமரத்துக்
காயை
குத்தித் தின்ன
ஆசை
கிணத்து
தண்ணிரில்
அள்ளி
குளிக்க ஆசை
கொடிகாமத்து
தேங்காய்
கொறித்து
தின்ன ஆசை
கீரி மலைக்
கேணியில்
நீச்சல்
அடிக்கத்தான் ஆசை
காங்கேசந்துறை
சுண்ணாம் போடு
வெத்திலை
போட ஆசை
மாசி முரல்
சொதியோட
இடியப்பம்
சாப்பிடத்தான் ஆசை
ஜாதியம் பேசும்
நாக்கை
அடைத்து விட
ஆசை
சீதனம் வாங்கும்
கோழை தலையில
மொட்டை போட
ஆசை
பெண்கள் கையை
இழுப்பவன்
கையை முறித்து
விட ஆசை
சிங்களப் படையை
மண்ணை விட்டு
துரத்தி விட
ஆசை
பொங்கி எழும்
மக்கள் படையுடன்
சேர்ந்து விட
ஆசை
மாணவரின்
பேனாவை பறிக்கும்
கயவன் நெஞ்சில்
குத்திவிட ஆசை
ஈழத்தில்
கற்றவரை கொல்லும்
மூதேவிகள் முகத்தில்
குத்திவிட ஆசை
பேரினவாதம்
பேசும் பிக்குவின்
காவியை
களட்டிவிட ஆசை
காட்டிக் கொடுக்கும்
கயவன்
மண்டையில்
போட ஆசை
சொந்த மண்ணை
மீட்க நானும்
அங்கு போக
ஆசை
மாவீரர்
தியாகத்தை
என் கவியில்
பாட ஆசை
கரும்புலிகள்
வீரத்தை
புதிய புறநானூற்றில்
எழுதிவிட ஆசை
அகதி என்ற
சொல்லை மாற்றி
தமிழ் புலி
ஆகி விடஆசை
மலரும்
தமிழ்ழீழத்தை
பார்த்துவிட
ஆசை