Friday, May 16, 2008

நன்றி

எழுதாமறையாக இருந்தவனை
எழுதவைத்த நட்புக்கு நன்றி

குடத்துள் விளக்காக இருந்தவனை
குன்றிலே ஏற்றிவைத்தீர் நன்றி

நண்பனாக வந்த என்னை
உன் இதயதில் அணணாவாக
இடம் தந்தாய் நன்றி

நம் நட்புக்கு பாலமாக இருந்த
அந்த மலர்களுக்கும் நன்றி

கூண்டுக் கிளிபோல இருந்த-என்
சிந்தனையை சிறகுகள் விரித்து
பறக்கவைத்தாய் நன்றி

வீணாக இருந்த என் பேனாவுக்கு
ஒரு அர்த்தம் கொடுத்தாய் நன்றி

அன்புக்கு நன்றி சொல்ல என்
கவி நயதில் வார்தைகள் இல்லை
நன்றி

No comments: