காற்றோடு காற்றாக
பறந்து செல்லும்
வெற்றுக் காகிதங்கள்
நாங்கள் அல்ல
எழுதப்பட வேண்டிய
புதுக்கவிதைகள் நாம்
உறவுகளை இழந்து
உணர்வுகளைப் புதைத்து
முற்களின் பாதையில்
நடக்கின்ற சிட்டுக்
குருவிகள் நாம்
`அ` எழுத வேண்டிய
பிஞ்சுக்கைகள்
பழுத்து சிவப்பாக...
புத்தகம் சுமக்கும்
வயதிலே…..
சிலுவைகள்
சுமக்கின்றோம்
அன்னையவள் அன்பு
முத்தம் எங்கே?
அணைத்திடும் தந்தை
கைகள் எங்கே?
கண்ணீ ர் துடைத்திடும்
தங்கை எங்கே?
அன்புக்கு ஏங்கும்
இதயங்களாக நாம்
உறங்கிட முற்றமில்லை
பசித்திடின் புசிக்கவில்லை
மானம்காகாக்க உடைகூட இல்லை
பசி எமக்கு நண்பன்
தரை எமக்கு மெத்தை
மழை எமக்கு குளியல்
எம் இருள் களைந்து
ஒளியேற்ற உதவிக்கரம் தந்திடுவீர்
No comments:
Post a Comment