Wednesday, November 12, 2008

சிலுவைகள் சுமக்கின்றோம்

காற்றோடு காற்றாக
பறந்து செல்லும்
வெற்றுக் காகிதங்கள்
நாங்கள் அல்ல

எழுதப்பட வேண்டிய
புதுக்கவிதைகள் நாம்

உறவுகளை இழந்து
உணர்வுகளைப் புதைத்து
முற்களின் பாதையில்
நடக்கின்ற சிட்டுக்
குருவிகள் நாம்

`அ` எழுத வேண்டிய
பிஞ்சுக்கைகள்
பழுத்து சிவப்பாக...

புத்தகம் சுமக்கும்
வயதிலே…..
சிலுவைகள்
சுமக்கின்றோம்

அன்னையவள் அன்பு
முத்தம் எங்கே?
அணைத்திடும் தந்தை
கைகள் எங்கே?
கண்ணீ ர் துடைத்திடும்
தங்கை எங்கே?

அன்புக்கு ஏங்கும்
இதயங்களாக நாம்


உறங்கிட முற்றமில்லை
பசித்திடின் புசிக்கவில்லை
மானம்காகாக்க உடைகூட இல்லை

பசி எமக்கு நண்பன்
தரை எமக்கு மெத்தை
மழை எமக்கு குளியல்

எம் இருள் களைந்து
ஒளியேற்ற உதவிக்கரம் தந்திடுவீர்

No comments: