Wednesday, November 12, 2008

தமிழ் கவியோ


கட்டு இளகி
மொட்டவிழ்ந்த
புன்னகைப் பூ இதுவோ

சிட்டு அவள்
இதழ் கவிழ்ந்த
தேன்கிண்ணம்தான் இதுவோ

முத்தாக
மின்னுகின்ற-பல்
மாதுளைதான் அதுவோ

கண்களின்
கருமையது
கருவண்டுதான் அதுவோ

தென்றலிலே
தவள்ந்துவரும்
தெம்மாங்குதான் அவளோ

சத்தமிட்டு
முத்தமிட்ட
தமிழ்க் கவிதான் அவளோ


No comments: