தமிழ் கவியோ
கட்டு இளகி
மொட்டவிழ்ந்த
புன்னகைப் பூ இதுவோ
சிட்டு அவள்
இதழ் கவிழ்ந்த
தேன்கிண்ணம்தான் இதுவோ
முத்தாக
மின்னுகின்ற-பல்
மாதுளைதான் அதுவோ
கண்களின்
கருமையது
கருவண்டுதான் அதுவோ
தென்றலிலே
தவள்ந்துவரும்
தெம்மாங்குதான் அவளோ
சத்தமிட்டு
முத்தமிட்ட
தமிழ்க் கவிதான் அவளோ
No comments:
Post a Comment