Saturday, June 28, 2008

மழலை

வண்ண எழில்
வதனமடி
வான் வெளியில்
பனிச்சாரலடி

கண்களிலே கருமைக்
காந்தமடி
பார்வையிலே பவள
மின்னலடி

இதழ்களில் தேன்
கிண்ணமடி
சிரிக்கிறதே பால்
வெண்மையடி

பேசுகின்றதே கிள்ளை
மொழியடி
இனிக்கிறதே அதன்
இனிமையடி

கால்கள் பஞ்சு
மெத்தையடி
மிதிக்கின்றதே அது
சொர்க்கமடி