Saturday, June 28, 2008

வீரத்தாலட்டு

தூங்காதே
கண்மணியே-நீயும்
தூங்காதே

தூக்கம்
வந்தாலும்-நீயும்
தூங்காதே

தமிழுக்கு
நாடுவரும்-வரை
தூங்காதே

பகைவனும்
வந்திடுவான்-அன்பே
தூங்காதே

பச்சைப்பிள்ளை
என்றும்-பாரான்
தூங்காதே

உறவுகள் இழப்புக்
கண்டும்-நீயும்
வெதும்பாதே

அவர்கள் உதிரம்
எழுதும்-எம்
தாய் நாடே

பெற்றஅன்னை
அவளும்-அன்பே
நான்தானே

என்காயங்கள்
மாறுது-கண்ணே
உன்வரவாலே

களம் சென்ற
தந்தை-வருவான்
தூங்காதே

வீரனின்
புதல்வனும்-அன்பே
நீதானே

விரைவில்
வளர்ந்துவா-காப்போம்
நம்நாடே