மார்கழி மாதத்து
மாலை நேரத்தில்
மலர்விழி உன்னை
மலர்த்தோட்டம்தனில் கண்டேன்.....
மழைத்துளியில் நீயும்
மயங்கி விளையாடி
மலர்க்கூந்தல் கலைந்து
மயங்கிநின்ற வேளையில்.....
மலர்க்கூட்டங்களில்
மறைந்திருந்து பார்த்தேன்.....
மலர்போன்ற உன் அழகை
மரகதமே உன்னையடி.....
மறக்கவே முடியவில்லை
மயில் போன்ற உன் நடையும்
மல்லிகைக்கொடியிடையும்
மன்மதன் அவன் உன் அழகில்
மயங்கிய நின்று
மதியென விழித்துவிட்டேன்
மான்விழியாள் எனைக்கண்டு.....
புள்ளிமான் போல
நாணம் கொண்டு
ஓடியே மறைந்துபோனாள்
என் இதயம் திருடிக்கொண்டு
தேடினேன் காணவில்லை
மாரிசன் மாறிவந்த
பொன்மான் அவள்தானே?