கலங்காதே........
இருள் என்று இருந்தால்
உன் வாழ்வில் பகலும் வரும்
இதயமே கலங்காதே...
அமாவாசையாக இருந்தால்
பௌர்ணமி நிட்சயம் வரும்
உயிரே கலங்காதே...
சூரியனாக துன்பங்கள்
உன்னை சுட்டாலும்
சந்திரன் வருவான்
நண்பனே கலங்காதே...
வரண்டுபோன நிலம் போல்
உன்வாழ்வு இருந்தாலும்
வரும் நதியவன் மழை
கொண்டு வருவான்
அன்பே கலங்காதே...
கலக்கம்தான்
உன் வாழ்வு அல்ல
எதிர் நீச்சல்
போடு கலங்காதே