Saturday, June 28, 2008

இந்த நாள் எப்போது

யுத்த மேகங்கள் கலைந்து-வானில்
குண்டு மழைகள் ஓய்ந்து-அடங்கி
மரணத்தின் ஓலங்கள் மறைந்து-ஓடி
இரத்ததின் ஆறுகள் இமைகள்- மூடி
நரபலி மனிதனின் பற்கள்-விழுந்து
புரையோடிய மக்கள் கொள்கைகள்-மாறி
இன்றுதான் பிறந்தோம் என்று-கூறி
பறவைகள் வானில் இனியகானம்-பாடி
பொன்மணி நெற்கள் கொழித்து-விளைந்து
பிறந்த் பூமியில் உறவுகள்-கூடி
இனிமையாகும் அந்நாள்-எந்நாள்