அகதிகளாகி
அலைகடல்-ஏறி
அக்கரை சேர்ந்த
ஓடங்களே....
உடமைகள்--இழந்து
உறவினைப்-பிரிந்து
உடல்களைச்-சுமந்த
ஜீவன்களே....
உங்கள் அழுகையின்
கண்ணீர் கடலுடன்-கலந்து
உப்பாய்போனதோ
சொல்லுங்களேன்....
இடை நடுவில்
பகையது வந்து
கதையை முடிக்குது
பாருங்களேன்....
அவர்கள் உதிரங்கள்-பெருகி
கடலுடன் கலந்து
மீன்களும் கலங்குதோ
சொல்லுங்களேன் ....
கரைகள் சேர்ந்த
உயிர்கள் கூட
சுகந்திரமின்றி
முடங்கி இருக்குது
பாருங்களேன்
No comments:
Post a Comment