Monday, November 10, 2008

அகதிகளாகி

அகதிகளாகி
அலைகடல்-ஏறி
அக்கரை சேர்ந்த
ஓடங்களே....

உடமைகள்--இழந்து
உறவினைப்-பிரிந்து
உடல்களைச்-சுமந்த
ஜீவன்களே....

உங்கள் அழுகையின்
கண்ணீர் கடலுடன்-கலந்து
உப்பாய்போனதோ
சொல்லுங்களேன்....

இடை நடுவில்
பகையது வந்து
கதையை முடிக்குது
பாருங்களேன்....

அவர்கள் உதிரங்கள்-பெருகி
கடலுடன் கலந்து
மீன்களும் கலங்குதோ
சொல்லுங்களேன் ....

கரைகள் சேர்ந்த
உயிர்கள் கூட
சுகந்திரமின்றி
முடங்கி இருக்குது
பாருங்களேன்

No comments: