எனை ஏன் மறந்தாய்
என் அன்பே இன்று-இங்கே
கவிதைகள் கண்டு அன்று
கருத்துக்கள் தந்தாய்-பெண்ணே
பாசத்தின் நிழலாய் வந்து
நெஞ்சத்தில் சுவடாய் நின்றாய்
பழகியநாட்கள் எல்லாம்
பசுமைச் சோலைகளாய்-நீ
க்விதைக்களத்தில் அன்று
காறி அவன் உழிழ்ந்த போது
பதில் கணை கொடுத்து
கை கொடுத்தேன் உனக்காக
தேடிவந்த நட்பு அவனை
தேடவில்லை அன்று உனக்காக
ஏன் இந்த மெளனம் இன்று
கலையட்டும் அது எனக்காக