Tuesday, October 14, 2008

விண்மீனா



இருளினிலே மருளுகின்ற
விண்மீன்கள் கொண்டாட்டம்
இருவிழிகள் கருவிழியால்
விடுகிறதே காதல் தேரோட்டம்

மின்சார விழிகள் இரண்டும்
மின்னி இழுக்கிறது மின்மினியாய்
கயல்விழியே என் இதயம்
காந்தமாகக் கவர்கிறதே

தேவதையே உன் நினைவுகள்
தேய்ந்துவிடாத வளர்பிறையே
தேம்பி அவனும் அழுகின்றான்
தேங்காமல் நீயும் வந்துவிடு

தேனைப்பருக என்று
தேடிவந்த தேனிகூட
தேவி உன் முகம் கண்டு
தேகம் சிலிர்த்ததுவோ

தீண்டவில்லை உன் இதழை
தித்திக்கும் சுவைகண்டும்
தீங்கிழைக்க விரும்பாமல்
தீர்க்கமாய் காத்திருக்கு

தேவலோக கன்னியே
நீயும் வந்துவிடு
தேவனுக்கு அன்பே
நீயும் உன்னைத்தந்துவிடு

No comments: