Tuesday, October 14, 2008

வெண்ணிலா



சின்ன சின்ன கவி
சொல்ல வந்தேன்
வெண்ணிலாவே

உன் வெண்மையினால்
என் உயிர் சிதைந்தது
வெண்ணிலாவே

நட்ச்சத்திரங்கள்
உன்னைப்பார்த்து
கண்சிமிட்டுது வெண்ணிலாவே

அந்த கண்சிமிட்டை
எப்படித்தான் தாங்குறாயோ
வெண்ணிலாவே

பொறாமை கொண்ட கருமுகில்கள்
உன்னை மறைக்கிறது
வெண்ணிலாவே

கருமுகில்கள் மறைக்கும்போதுதான்
உன் உடையை மாத்துகிறாயா
சொல்லு வெண்ணிலாவே

வாணில் உள்ள
வால் வெள்ளிகள்தான்
வெண்ணிலாவே

உனக்கு காதல்
தூது செய்கின்றதா
சொல்லு வெண்ணிலாவே

உயிரோடு உயிர்
சேர்ந்தால்த்தான்
காதல் வெண்ணிலாவே

காதலிலே தோல்வியுற்றால்
மரணம் தானா பதில்
சொல்லு வெண்ணிலாவே

No comments: