வெண்ணிலா
சின்ன சின்ன கவி
சொல்ல வந்தேன்
வெண்ணிலாவே
உன் வெண்மையினால்
என் உயிர் சிதைந்தது
வெண்ணிலாவே
நட்ச்சத்திரங்கள்
உன்னைப்பார்த்து
கண்சிமிட்டுது வெண்ணிலாவே
அந்த கண்சிமிட்டை
எப்படித்தான் தாங்குறாயோ
வெண்ணிலாவே
பொறாமை கொண்ட கருமுகில்கள்
உன்னை மறைக்கிறது
வெண்ணிலாவே
கருமுகில்கள் மறைக்கும்போதுதான்
உன் உடையை மாத்துகிறாயா
சொல்லு வெண்ணிலாவே
வாணில் உள்ள
வால் வெள்ளிகள்தான்
வெண்ணிலாவே
உனக்கு காதல்
தூது செய்கின்றதா
சொல்லு வெண்ணிலாவே
உயிரோடு உயிர்
சேர்ந்தால்த்தான்
காதல் வெண்ணிலாவே
காதலிலே தோல்வியுற்றால்
மரணம் தானா பதில்
சொல்லு வெண்ணிலாவே
No comments:
Post a Comment