Saturday, June 28, 2008

புரிந்துகொள்ளுங்கள்

சுத்துகின்ற
பூமியில் நாம்
நிரந்தரம்
இல்லை

இதை சிந்திக்க
மனிதனுக்கு
நேரமும்
இல்லை

சத்தம் போட்டு
யாரும் இங்கு
சண்டை போடத்தேவை
இல்லை

நாளை இந்த
பூமியில்
நாம் யாரும்
இல்லை

உயர்வு
தாழ்வு
இங்கு தேவை
இல்லை

நாளை நீ
போகும் போது
உன் கூடவருவது
இல்லை

சாதி மத
பேதம்
இங்கு பெரும்
தொல்லை

அதனால்
தமிழனின் வாழ்வில்
முன்னேற்றம்
இல்லை

கறுப்பு
வெள்ளை என்று
இங்கு யாரும்
இல்லை

இது மாயையின்
தோற்றம்தான்
நீ புரிந்து
கொள்வது இல்லை

இங்கு
வாழ்வதுதான்
வாழ்க்கை
இல்லை

இதை புரியாத
மனிதன்
பூரணமனிதனும்
இல்லை

No comments: