Saturday, June 28, 2008

உணர்வுகள்

நீயிருந்த கருவறையில்
நானும் இருந்தேன்
பெருமை அண்ணா....

கல்லறையில் நீ உறங்க
கண்ணீரில் நானும் இங்கே

தாய் மண் காத்திடவே
தலைவரின் வழியில் நின்றாய்

தாய் தந்தை வாழ்வுக்காய்
அகதியாக நானும் இங்கே

கல்லறையில் நீயும் அன்பே
நிம்மதி உறக்கமா அண்ணா???

நாலுசுவர் வீட்டினிலே இங்கே
நரகப்பட்ட வாழ்க்கையடா

நானும் வந்து இணைந்திடவே
நாளங்கள் துடிக்குதடா

நான் வந்து உனைக்கான
காத்திருந்த வேளை அண்ணா.....

வீரச்சாவு செய்தி கேட்டு
என்னை நான் இழந்தேன

என் குரல் கேட்காமல்
எப்படி நீயும் உறங்குகின்றாய்?

உன் இனிய குரல் ஓலி
இன்னும் என் காதில் ஒலித்து .....

என் கண்களில் நீராய் கரையுது
அண்ணா........

என் கவிதைகளுக்கு ஊக்கம் தந்த நண்பியின் அண்ணாவுக்கு
வீரவணக்கம்