Saturday, June 28, 2008

தமிழா?

தமிழினமே
தமிழினமே
எங்கே
போகின்றாய்

அகதியாக
வந்து நீயும்
உன் மானதை
விடுகின்றாய்

அச்சம் மடம்
நாணம் பயிர்ப்பு
என்றால் என்ன
என்கின்றாய்

தமிழ் மொழியை
நீயும்
ஏளனம்
செய்கின்றாய்

காதலனை
நாளுக்கு
நாள்
மாத்துகின்றாய்

கற்பு என்றால்
என்ன
என்று
கேட்கின்றாய்

ஊரை உறவை
விட்டு வந்தும்
உணராமல்
இருக்கின்றாய்

பண்பாடு மறந்து
நீயும் உன்
அடையாளம்
மறக்கின்றாய்

வெளி நாடு
தான்உன்
அப்பன் நாடு
என்கின்றாய்

நாசி அடித்தால்
நீ எங்கே
போகப்
போகின்றாய்???