Saturday, June 28, 2008

கவிக்கடல்

கவிதயாலே
கவிதை
இங்கு புனையாப்
பார்க்கிறேன்

கவிதை என்னும்
பாற்கடலை
நக்கி குடிக்கப்
பார்க்கிறேன்

அந்த பாற்
கடலில் பள்ளி
கொள்ள ஆசை
கொள்கிறேன்

பாற்கடலை
நானும்
கடைந்து பருகப்
பார்க்கிறேன்

தேவர்கள்
அசுர்கள் போல
நானும் முயன்று
பார்க்கிறேன்

விடம் உண்ட
கன்டன் போல
கவிதையில்
சிக்கிதவிக்கிறேன்

மொத்தத்தில்
நானும்
கவிமழையில்
முழ்கிப்போகிறேன்