Saturday, June 28, 2008

வாழ்க்கை

விழுந்தவனைத்
தான் இங்கு
மாடும் ஏறி
மிதிக்குது

நொந்தவன்
புண்ணில்
அம்பு வந்து
குத்துது

சுமைதாங்கி
மீதுதான்
இடியும்
வந்து விழுகுது

கட்டிய மனக்
கோட்டை
எல்லாம் சுக்கு
நூறாய் போகுது

பரதேசி
போலத்தான்
இந்த உயிரும்
சுத்துது

கால்கள் போன
போக்கிலே
இந்த உயிர்
போகுது

வாழ்க்கை
என்பதே
அர்த்தமின்றி
வீணாகப் போகுது

முடிவு உள்ள
வாழ்கையில்
முன்னேற
மனம் துடிக்குது

பரந்து பட்ட
உலகத்தில்
இறக்கை இன்றி
பறக்கத் துடிக்குது

கிடைத்தே
போதும்
என்று மனமும்
தடுக்குது