Saturday, April 19, 2008

உன்னைத் தொட மாட்டேன்




உன்னைத் தொட மாட்டேன்
உன்னைத் தொட மாட்டேன்

வெண்நிலவே உன்னைத்
தொட மாட்டேன்

கண்களிலே உன்னை நானும்
கொள்ளை இடமாட்டேன்

காதல் என்று சொல்லி
உன்னை இழுக்க மாட்டேன்

உன்னைப் போல நானும்
தேய்ந்து வளர மாட்டேன்

காதல் கன்னி அவள்போல
உன்னை இம்சை
செய்ய மாட்டேன்

எட்டாத உயரத்தில்-நீ
ஏணி வைத்தும்
உன்னைப் பிடிக்க மாட்டேன்

உன்னைப்போல நானும்
தனிமையில் ஏங்க மாட்டேன்

தேன் நிலவு தேவதையே-நான்
தேம்பியழ மாட்டேன்

தேடி நீ என்னை வந்தாலும்
உன்னைத் தீண்ட மாட்டேன்

No comments: