என்னவளே
என்னவளே
என் கண்ணின்
கருவிழியே!
கருவுக்கு
உயிர்கொடுக்கும்
உன்னதப்
பெண் இவளே!
என்னவளே
என்னவளே
என் குருதியும்
நீதான் என்னவளே!
உன் குருதியை
பாலாக்கி சேய்க்கு
ஊட்டும் உமையும்
நீதான் என்னவளே!
என்னவளே
என்னவளே
உன் கூந்தல்தலின்
கருமைதான் என்னவளே!
மதிபோன்றமுகத்தின்
கருமுகில்தான்
உன் கூந்தலா
மன்னவளே!
என்னவளே
என்னவளே
உன் குரலின்
இனிமைதான் என்னவளே!
நான் கேட்கும்
இசைதானா
உன் குரல்
என்னவளே!
என்னவளே
என்னவளே
என் இதயத்துடிப்பும்
நீதான் என்னவளே!
நீ இல்லை எனின்
என் இதயத்துடிப்பு
நின்றுவிடும்
மன்னவளே!
என்னவளே
என்னவளே
என் மூச்சுக்காற்றும்
நீதானா என்னவளே!
நீ இல்லை எனின்
என் உடல் ஜடம்
ஆகிவிடும்
மன்னவளே