Saturday, June 28, 2008

என்னவனே

உன்னை நினைத்து
உன்னை நினைத்து
என் இதயமே
ஏங்குறேனடா

என் காதல்
சொல்ல முடியாமல்
இங்கு செல்லம்
தவிக்கிறேனடா

உந்தன் அன்பு
உள்ளம் தன்னை
நானும் இங்கு
விரும்புறேனடா

நீ பேசும்
தமிழை என்றும்
இனியவனே
சுவாசிக்கிறேனடா

காதலை முன்பு
வெறுத்தவள்
அன்பே
நான் தானடா

உந்தன் காதல்
வலையின்
சிக்கி இப்ப
தவிக்கிறேனடா

உன்னை
எண்ணி எண்ணி
எனக்குள்
சிரிக்கிறேனடா

காதல் பித்தில்
நானும் இன்று
தளம்புறேனடா

கானும் பொருள்
எல்லாம் உன் அழகு
வதனம்தானடா

நான் கேட்கும்
ஓசை எல்லாம்
உந்தன் பெயர்தானடா