உன்னை நினைத்து
உன்னை நினைத்து
என் இதயமே
ஏங்குறேனடா
என் காதல்
சொல்ல முடியாமல்
இங்கு செல்லம்
தவிக்கிறேனடா
உந்தன் அன்பு
உள்ளம் தன்னை
நானும் இங்கு
விரும்புறேனடா
நீ பேசும்
தமிழை என்றும்
இனியவனே
சுவாசிக்கிறேனடா
காதலை முன்பு
வெறுத்தவள்
அன்பே
நான் தானடா
உந்தன் காதல்
வலையின்
சிக்கி இப்ப
தவிக்கிறேனடா
உன்னை
எண்ணி எண்ணி
எனக்குள்
சிரிக்கிறேனடா
காதல் பித்தில்
நானும் இன்று
தளம்புறேனடா
கானும் பொருள்
எல்லாம் உன் அழகு
வதனம்தானடா
நான் கேட்கும்
ஓசை எல்லாம்
உந்தன் பெயர்தானடா