Saturday, June 28, 2008

கடவுள்

கடவுளின்
பெயரினால்
கட்சிகள்
கூட்டுகின்றார்

சாமியாரின்
வேடத்தில்
காம லீலைகள்
புரிகின்றார்

கடவுள் என்று
போற்றியவர்
இன்று கம்பி
எண்ணுகின்றார்

நடமாடும்
தெய்வம் என்று
நல்லா நாடகம்
ஆடுகின்றார்

மூடநம்பிக்கையில்
எம்மவர்
மூழ்கிப்போய்
இருக்கின்றார்

கற்கள் பால்
குடிப்பதாக
பாலும் வீணாக
ஊத்துகின்றார்

உலகில்
சைவத்தை
சும்மா கேவலப்
படுத்துகின்றார்

இறைவனைத்
தேடுவதாய்
தாவிக்
குதிக்கின்றார்

அறியாமையினால்
தம்மைத்
தாமே
ஏமாற்றுகின்றார்

உனக்குள்
இறைவன் உண்டு
அதை ஏற்க
மறுக்கின்றாய்