கடவுளின்
பெயரினால்
கட்சிகள்
கூட்டுகின்றார்
சாமியாரின்
வேடத்தில்
காம லீலைகள்
புரிகின்றார்
கடவுள் என்று
போற்றியவர்
இன்று கம்பி
எண்ணுகின்றார்
நடமாடும்
தெய்வம் என்று
நல்லா நாடகம்
ஆடுகின்றார்
மூடநம்பிக்கையில்
எம்மவர்
மூழ்கிப்போய்
இருக்கின்றார்
கற்கள் பால்
குடிப்பதாக
பாலும் வீணாக
ஊத்துகின்றார்
உலகில்
சைவத்தை
சும்மா கேவலப்
படுத்துகின்றார்
இறைவனைத்
தேடுவதாய்
தாவிக்
குதிக்கின்றார்
அறியாமையினால்
தம்மைத்
தாமே
ஏமாற்றுகின்றார்
உனக்குள்
இறைவன் உண்டு
அதை ஏற்க
மறுக்கின்றாய்